ஆனந்தமலை முருகன் கோயிலில் கிருத்திகை விழா ஏற்பாடு தீவிரம்

ஊட்டி, மே 25:  ஊட்டி அருகே கீழ் அப்புகோடு பகுதியில் ஆனந்தமலை முருகன் கோயில் உள்ளது. இக்கோயில் மாதந்தோறும் கிருத்திகை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக வரும் ஜூன் 2ம் தேதியன்று  கிருத்திகை விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு அன்று காலை 10 மணிக்கு சித்தி விநாயகருக்கு அலங்கார பூஜை, ஆனந்தமலை முருகனுக்கு அபிேஷக பூஜை, ஏழு ஹெத்தையம்மன், நவ கிரகங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

விழாவினை முன்னிட்டு காலை 10 மணி முதல் 12 மணி வரை குருத்துகுளி நன்மணி லட்சுமணன் குழுவினாின் சிறப்பு பஜனை இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 12 மணிக்கு தஞ்சை ஆனந்தசித்தரின் ஆன்மீக அருளுரை நடக்கிறது. தொடர்ந்து நஞ்சநாடு மீனாட்சி குழுவினரின் கலாசார நடன நிகழ்ச்சி, அன்னதானம்  நடக்கிறது. விழா ஏற்பாடுகளை  கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: