ராணுவ வீரர் வீட்டில் நகை திருட்டு

அலங்காநல்லூர், மே. 25: ராணுவ வீரர் வீட்டில் நகை திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அலங்காநல்லூர் அருகே சர்க்கரை ஆலை மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (38). இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மேட்டுப்பட்டியில் உள்ள இவரது வீட்டில் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து அவரது தந்தை முருகன் (65) அளித்த புகாரின்பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: