செந்தில் பாலாஜி புகாரால் 2 அதிமுக முகவர்கள் வெளியேற்றம்

கரூர், மே 24: கரூர் மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது. முன்னதாக அனைத்து கட்சிகளின் முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பலத்த சோதனைக்கு பிறகு வாக்குஎண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது அதிமுக சார்பில் மாவட்ட அவை தலைவர் காளியப்பன், நகர செயலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் அதிமுக வேட்பாளரின் முகவர்களாக வந்திருந்தனர். இவர்கள் இருவரும் கூட்டுறவு சங்க பொறுப்பில் உள்ளவர்கள். அரசு பொறுப்பில் உள்ளவர்கள் முகவர்களாக வரக்கூடாது என்பதால், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி ஆகியோர் தேர்தல் பொது பார்வையாளரிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து காளியப்பன், நெடுஞ்செழியன் வெளியேற்றப்பட்டனர்.

Related Stories: