திருமயம் அருகே கோயில் திருவிழாவையொட்டி பெண்களுக்கான கபடி போட்டி

திருமயம், மே 23: திருமயம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு பெண்களுக்கான கபடி போட்டி நடத்தப்பட்டு வெற்றிபெற்ற அணிக்கு ரொக்க பரிசு மற்றும் சுழற் கோப்பை வழங்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராயவரம் முத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா கடந்த வாரம் முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 9ம் திருவிழாவை முன்னிட்டு அண்ணா சீரணி கலையரங்கம் வளாகத்தில் நேற்று 45ம் ஆண்டு பெண்களுக்கான கபடி போட்டி நடத்தப்பட்டது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 14 அணிகள் கலந்து கொண்டன. பல்வேறு சுற்றுகளுக்கு பிறகு 4 ஆணிகள் பரிசு சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் சேலம் அழகுசிவானி அணி முதல் பரிசையும், திருமயம் வெண்புறா கபடி குழு 2ம் பரிசையும், திருச்சி ஹோலிகிராஸ் அணி 3ம் பரிசையும்,முசிறி எம்ஜிஎம் அணி 4ம் பரிசையும் வென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ரொக்க பரிசும், குழற் கோப்பையும் வழங்கப்பட்டது. போட்டியைக்கான சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் வந்திருந்திருந்தனர்.

Related Stories: