கும்மிடிப்பூண்டி, மே 23: செல்போன் திருட்டு போன தகராறில் வாலிபரை அடித்துக்கொன்ற 4பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சச்சின்குமார்(23) வேலை பார்த்து வந்தார். இவர் புது கும்மிடிப்பூண்டியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மேலும் இவரது வீட்டின் அருகே ஓடிசாவைச் சேர்ந்த அஜய் உள்பட சில தொழிலாளர்களும் வாடகைக்கு வீடு எடுத்து வசிக்
கின்றனர்.இந்நிலையில் அஜயினுடைய செல்போன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டு போயுள்ளது. அதனை பக்கத்து வீட்டில் தங்கி இருந்த வடமாநில வாலிபரான ராஜேஷ் திருடியதாக கூறி அவருடன் அஜய் அவரது நண்பர் மஸ்தான் உள்ளிட்டோர் தகராறில் ஈடுபட்டனர்.