ஆற்காடு, மே 23: ஆற்காடு நல்லத்தண்ணீர் குளம் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்(36). இவரது மனைவி ரேவதி(32). இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால், கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரேவதி தனது கணவரிடம் கோபித்து கொண்டு குழந்தைகளை அழைத்து கீழ்விசாரத்தில் உள்ள அவரது அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து, ரமேஷ் பல முறை கீழ்விசாரம் சென்று ரேவதியை அழைத்தும் வரவில்லையாம். மீண்டும் கடந்த 20ம் தேதி சென்று அழைத்துள்ளார். அப்போதும் வர மறுத்ததால் மனவேதனையடைந்த ரமேஷ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.