ஒரத்தநாட்டில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் போலீஸ் விசாரணை

ஒரத்தநாடு, மே 22: ஒரத்தநாடு அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரத்தநாடு தாலுகா நெய்வாசல் கிராமத்தில் தஞ்சை- மன்னார்குடி மெயின்ரோடு அருகே சுடுகாடு அருகில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து ஒரத்தநாடு காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.   இதில் ஒரு வாரத்துக்கு முன்பே ஆண் சடலம் கிடந்துள்ளது. இவர் யார், எதற்காக இங்கு வந்தார், கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடையாளம் தெரியாத ஆண் சடலத்தின் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதன்பிறகே இவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெரியவரும்.

Related Stories: