மதுராந்தகம், மே 22: அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு அருகே சிறுபேர் பாண்டி கிராமம் தண்டு மாரியம்மன் கோயிலில் 3 நாள் திருவிழா நடந்து முடிந்தது. அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு அருகே சிறுபேர் பாண்டி கிராமத்தில், தண்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி திருவிழா கூழ்வார்த்தலுடன் 3 நாட்கள் நடத்தப்படும்.இதையொட்டி, முதல் நாளன்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்குடங்கள் ஊர்வலம், மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தன. 2வது நாளன்று கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடத்திய கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடத்தினர். இதில் கிராம மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் உள்ள அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கெண்டனர்.