சென்னை, மே 21: முகப்பேர் வேணுகோபால் தெருவை சேர்ந்தவர் தசரதன் (50). இவர், இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவராக மதம் மாறியவர். உடல்நிலை பாதிக்கப்பட்ட தசரதன் நேற்று முன்தினம் இறந்தார். அவரது சடலத்தை அதே பகுதியில் உள்ள கிறிஸ்துவ கல்லறை தோட்டத்தில் புதைக்க உறவினர்கள் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காலை இறுதிச் சடங்கு செய்ய சடலத்துடன் புறப்பட்டனர். அப்போது, அந்த கல்லறை தோட்டத்தை பராமரித்து வரும் பாதிரியார், ‘‘எனது சர்ச்சுக்கு வருபவர்களுக்கு மட்டுமே இங்கு சடலத்தை புதைக்க அனுமதி உண்டு.