வத்தலக்குண்டுவில் ‘ெதாட்டு விடும்’ மின்வயர் மாற்றியமைப்பு பொதுமக்கள் நிம்மதி

வத்தலக்குண்டு, மே 19: தினகரன் செய்தி எதிரொலியாக வத்தலக்குண்டுவில் தாழ்வாக சென்ற மின்வயர்கள் உயரமாக மாற்றி அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலை மஞ்சளாற்று பாலம் அருகே கடைகள் அதிகம் உள்ள பகுதியில் மின்வயர் எட்டி விடும் தொடும் அளவு தாழ்வான நிலையில் சென்றது. இதனால் அவ்வழியே வாகனங்களில் செல்பவர்கள் மீது மின்வயர் உரசி உயிரிழப்பு அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து இப்பகுதி மக்கள், வத்தலக்குண்டு மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம்காட்டி வந்தனர். இதுகுறித்து கடந்த 13ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மின்வாரியத்தினர் சில நாட்களில் தாழ்வாக சென்ற மின்வயரை உயரமாக செல்லுமாறு மாற்றியமைத்தனர். அதன்பிறகே இப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Related Stories: