திருப்பூர், மே 17: திருப்பூர் மாநகரின் மையப்பகுதியில் உள்ள வீரராகவ பெருமாள் கோயில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவையொட்டி தேர் வலம் செல்லும் பாதைகளில் மத்திய அரசின் ஊர்ஜா மின் திட்டத்தின் கீழ்பூமிக்கடியில் மின் கேபிள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருப்பூர் மாநகர் பகுதியின் பல்வேறு மெயின் ரோடுகளில் போக்குவரத்து இடையூறாக மின் கம்பங்கள் அமைந்துள்ளன. இந்த கம்பங்கள் இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் ் அவதிப்படுகின்றனர். பொது மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனை தவிர்க்க பூமிக்கடியில் மின் கேபிள்களை பதிக்க வேண்டுமென பொது மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மத்திய அரசின் ஊர்ஜா மின் திட்டத்தில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில், மின் புதைவடம் அமைக்கும் பணிகளை துவக்கியுள்ளனர். முதல் கட்டமாக திருப்பூர் அரிசிக்கடை வீதி, ஈஸ்வரன் கோயில்வீதி,