நாகர்கோவில், மே 17: பூ சாஸ்தான்விளை ஸ்ரீதர்மசாஸ்தா கோயிலில் 7 நாட்கள் கொடை விழா கடந்த 13ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து நிர்மால்ய பூஜை, மகா கணபதி ஹோமம், கலச பூஜை, சுவாமிக்கு கலச அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு அபிஷேகம், அன்னதானம், மாலையில் திருவிளக்கு வழிபாடு, தீபாராதனை, திருவிளக்கு பூஜை ஒழுங்கு பரிசு வழங்குதல், சிறப்பு பட்டிமன்றம் ஆகியன நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை மங்களவாத்தியம், நிர்மால்ய பூஜை, அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் ஆகியன நடைபெற்று வருகிறது. 2வது நாள் காலையில் கோலப்போட்டி, விளையாட்டு போட்டி, மதியம் பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, மாறுவேடப் போட்டி, மாலையில் ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றது. 3ம் திருநாளன்று மெல்லிசை, 4ம் திருநாளன்று புஷ்பாபிஷேகம், சிறப்பு அபிஷேகம் ஆகியன நடைபெற்றது.