கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள காயலான் கடைகளில் பதுக்கி கலப்பட டீசல் விற்றவரை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி புதுவாயல், பெருவாயல், கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி பைபாஸ், எளாவூர், சாமிரெட்டி கண்டிகை, கோரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காயலான் கடைகளில் திருட்டு பொருட்கள் வாங்குவதாக கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் கல்பனா தத்துக்கு புகார் வந்தது. அவரது உதரவின்பேரில் சிப்காட் போலீசார் நேற்று அந்த பகுதிக்கு உட்பட்ட காயலான் கடைகளில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.