ஊட்டி, மே 15: போக்குவரத்து காவல்துறை சார்பில் ஊட்டியில் சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. நீலகிரியில் கோைட சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் நகரில் ஏற்பட கூடிய ேபாக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கவும், பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை நீலகிரி மாவட்ட காவல்துறை எடுத்துள்ளது. இதன் ஒருபகுதியாக ஊட்டி நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். மது அருந்தி விட்டு வாகனத்தை ஒட்ட வேண்டாம். வேகத்தை விட பாதுகாப்பு மிக முக்கியம். இரவில் எதிரில் வாகனம் வரும் போது ஒளியை குறைக்க வேண்டும். சாலை சந்திப்புகளில் வேகத்தை குறைக்க வேண்டும். நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் கவனத்துடன் வாகனத்தை இயக்க வேண்டும். வளைவுகளில் முந்த கூடாது.