பால்குட திருவிழா

கும்பகோணம், மே 15: கும்பகோணம் வட்டிபிள்ளையார் கோயிலில் பால்குட திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 8ம் தேதி காப்பு கட்டுதல் நடந்தது. கடந்த 10 ம் தேதி காலை மாலையிருப்பு பிள்ளையாம்பேட்டை காவிரி ஆற்றங்கரையில் இருந்து பால்குடம், கரகம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் வட்டிபிள்ளையாருக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. அன்றிரவு சுவாமி வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: