திருப்பூர்,மே14: இந்தியாவில் தொடரும் பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றத்தால் அத்தியாசிய பொருட்களின் விலை அதிகாரிப்பால் ஏழை, எளிய பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டுமென சிஸ்மா கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தென்னிந்திய காலர் சர்ட் மற்றும் உள்ளாடை சிறு தொழில் முனைவோர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பாபுஜி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா பொருட்களின் விலை குறையும் பட்சத்தில் இந்தியாவில் மட்டும் பெட்ரோலிய பொருட்களின் விலை தினமும் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. குறுகிய காலத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5. 33பைசாவும், டீசல் ரூ.5.97பைசாவும் உயர்வடைந்து உள்ளதால் இதன்மேல் விதிக்கப்பட்டுள்ள வரிகளை மத்திய மாநில அரசுகள் குறைக்க வேண்டும். மேலும் லிட்டர் ரூ.67க்கு விற்கப்பட்ட பெட்ரோல் இன்று ரூ.86 ம் என உயர்ந்து வருவதால் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்களை வெளி மாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடு ஆகியவற்றிலிருந்து கொள்முதல் செய்யவும், விற்பனைக்காக ரயில், விமானம், லாரி ஆகியவற்றை பயன்பாடு முக்கியமானது. பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் அடிக்கடி வாடகை அதிகரித்துவருகிறது.