புதுக்கோட்டை, மே 14: டெல்டா மாவட்டத்தில் பருத்தி சாகுபடியில் சப்பாத்தி கள்ளி பூச்சி தாக்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுகை போன்ற மாவட்டங்களில் நிலத்தடி பெரும்பான்மையான பகுதியில் இல்லாததால் மேட்டூர் அணை பாசனத்தை நம்பி விவசாயிகள் குறுவை, தாளடி, சம்பா சாகுபடி செய்து வந்தனர். தற்போது தண்ணீர் தட்டுப்பாட்டால் பொரும்பான்மையான பகுதியில் குறைவான அளவில் கிடைக்கும். மேட்டுர் அணை தண்ணீர் மற்றும் மழை நீர் கொண்டு சம்பா சாகுபடி மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து கோடை சாகுபடியாக உளுந்து, பச்சை பயறு, எள் சாகுபடி செய்யப்படுகிறது. நிலத்தடி நீர் மற்றும் ஆறுகளில் தேங்கியுள்ள தண்ணீரை கொண்டு சில விவசாயிகள் திருமருகல், கீழ்வேளூர் போன்ற பகுதியில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகின்றனர்.