அரியலூர், மே 14: கோடை காலத்தையொட்டி அரியலூர் பகுதியில் வெளிமாவட்டத்தில் இருந்து வந்த பெரிய நெல்லிக்காய் விற்பனை ஜோராக நடக்கிறது. ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.
அரியலூர் பகுதியில் கடந்த 2 மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது அக்னி நட்சத்திர வெயிலால் தொண்டை வறண்டும், சருமங்கள் உலர்ந்தும், வியர்வையால்தினம்தோறும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் கோடை வெயிலுக்கு உகந்த பெரிய நெல்லிக்காய் விற்பனை அரியலூர் பகுதியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தற்போது அரியலூர்மாவட்டத்தில் பெரிய நெல்லிக்காய் விளைச்சல் குறைந்ததால் வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் விற்பனைக்காக வருகிறது. பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டால் முடி நன்கு வளரும், உடல்நல பிரச்னைகளை குணப்படுத்தும்.வாய்ப்புள்ளது.
மேலும் கோடை வெயிலால் பெரிய நெல்லிக்காய்கள் பழுத்தும், வெம்பியும் விடுவதால் 100 கிலோவுக்கு சுமார் 5 கிலோ வரை வீணாகி விடுகிறது. இதனால் கடந்தாண்டு ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது விளைச்சல் இல்லாமல் வெளிமாவட்ட பெரிய நெல்லிக்காய் வரவால் கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.