சீர்காழி, மே14: சீர்காழி அருகே சூரக்காடு உப்பனாற்றில் கரை உடையும் அபாயத்தில் உள்ளது. சீர்காழி அருகே சூரக்காடு உப்பனாற்றின் குறுக்கே திட்டை ஊராட்சி சிவனார் விளாகம் பகுதியிலிருந்து காரைமேடு ஊராட்சி பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் பைப் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக உப்பனாற்றின் நடுவே காங்கிரீட் பையில் அமைக்கப்பட்டு அதன்மேல் ராட்சஷ குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளுக்காக ஆற்றில் 600 மீட்டர் தூரத்திற்கு அடைக்கும் பணிக்காக ஆற்றின் கரையிலிருந்து மண் எடுக்கப்பட்டு அதனைக் கொண்டு ஆற்றின் குறுக்கே ஆணை போடப்பட்டுள்ளது ஆற்றின் கரையில் இருந்து அதிகளவில் மணல் எடுக்கப்பட்டுள்ளதால் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ள காலங்களில் ஆற்றில் அதிக தண்ணீர் செல்லும்போது கரையில் மண் எடுத்த பகுதியில் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.