துறையூர், மே 10: துறையூரில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் 10 பவுன் நகை உள்பட ரூ. ஒரு லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். துறையூர் ஆத்தூர் சாலையில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சேகர்(65). இவர் விடுமுறைக்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டிற்கு கோயமுத்தூர் சென்றுள்ளார். இதையறிந்து கொண்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை கடப்பாறையால் உடைத்து அதிலிருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.65 ஆயிரம் ரொக்கம், பூஜை அறையில் வைத்திருந்த ரூ.35 ஆயிரம் உள்பட வெள்ளி பொருட்களை அள்ளி சென்றனர்.