நாகர்கோவில், மே 10: குமரி மாவட்டம் உள்பட தென் தமிழக கடற்கரை பகுதிகளில் இன்று பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குமரி மாவட்ட கடலோர பகுதிகளில் ஏப்ரல், மே மாதங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுவது வழக்கம். தாழ்வான கடற்கரை பகுதிகளில் கடல்நீர் உட்புகுவதும், கடலரிப்பு தடுப்பு சுவர்கள் சேதமடைவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் இன்றும் கடற்கரை பகுதிகளில் பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் ‘தென் தமிழக கடல் பகுதிகளில் குளச்சல், முட்டம், குலசேகரபட்டினம், தூத்துக்குடி மற்றும் அருகில் உள்ள கடற்கரை பகுதிகளில் இன்று (10ம் தேதி) 15 முதல் 19 நொடிநேரம் நீளுகின்ற கடல் அலைகளுக்கு வாய்ப்பு உள்ளது.