பெரியகுளம், மே 10: பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் அட்சய திரிதியை முன்னிட்டு அகண்ட ஹரேராம மகாமந்திர கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக திருப்பாதுகைக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள், மதுரகீதம் பஜனை நடைபெற்றது. கிருஷ்ண அஷ்டோத்திரம், லட்சுமி அஷ்டோத்திரம் அர்ச்சனையும், மாதுரி ஸகி ஸமேத பிரேமிகவரதன் ஸ்வாமிக்கு விசேஷ திருமஞ்சனமும் சிறப்புற நடைபெற்றது. 108 நெய் தீபம் ஏற்றப்பட்டு தீப வழிபாடும் நடைபெற்றது.