திருத்தணி முருகன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் மழை வேண்டி நேற்று வருண பகவானுக்கு சிறப்பு சிறப்பு யாகம் நடந்தது. இதில் 9 கலசங்கள் வைத்து, நடைபெற்ற பூஜைகளில் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓதி வழிபட்டனர். திருத்தணி மற்றும் சுற்றுப்புறங்களில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டதால் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின்படி திருத்தணி முருகன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் வருண பகவானுக்கு நேற்று நடத்தப்பட்டது.

இதற்காக கோயில் உற்சவர் மண்டபம் அருகில் ஒரு யாகசாலை அமைத்து அதில் 9 கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. அப்போது மழை வேண்டி வருண பகவானுக்கு வேத விற்பன்னர்கள் மந்திரங்களை ஓதி வழிபட்டனர். நிகழ்ச்சியில் திருத்தணி கோயில் தக்கார் ஜெய்சங்கர், மேலாளர்கள் பழனி அருணாசலம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: