சித்தூர், மே 10: ஆந்திர பெண்ணை 6 ஆண்டுகளாக காதலித்து வந்த அமெரிக்க இன்ஜினியர் இந்து சம்பிரதாயப்படி முறைப்படி திருமணம் செய்துகொண்டார். ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்தவர் சுதாகர் நாயுடு, இவரது மனைவி குமாரி. இவர்களது மகன் நிரிஷா. இன்ஜினியரான இவர் அமெரிக்காவில் எம்எஸ் படிப்பதற்காக சென்றார். அப்போது, அமெரிக்காவை சேர்ந்த பீட்டர், சரூன் தம்பதியின் மகனான இன்ஜினியர் ஆன்ட்ரூசுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.