அட்சய திருதியை நெரிசலை பயன்படுத்தி பிரபல நகை கடையில் திருட முயன்ற ஆந்திராவை சேர்ந்த பெண் கைது: தொடர் கைவரிசை காட்டியது அம்பலம்

சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு கூட்ட நெரிசலை பயன்படுத்தி தி.நகரில் உள்ள பிரபல கடையில் நகை திருட முயன்ற ஆந்திர பெண்ணை போலீசார் கைது செய்தனர். அட்சய திருதியை முன்னிட்டு சென்னையில் உள்ள நகைக்கடைகளில் கூட்டம் அலை மோதியது. கூட்டத்தை பயன்படுத்தி நகை திருடும் கும்பலை படிக்க போலீசார் சாதாரண உடையில் கடைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தி.நகர் பனகல் பார்க் எதிரே உள்ள பிரபல நகைக்கடையில் நேற்று முன்தினம் அதிகாலை சந்தேகத்திற்கு இடமான வகையில் ெபண் ஒருவர் சுற்றி வந்துள்ளார். இதை பார்த்த நகைக்கடை ஊழியர்கள் மாம்பலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து கடையில் கூட்ட ெநரிசலில் சுற்றிதிரிந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை ேசர்ந்த லலிதா (34) என்பதும், இவர் ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை முன்னிட்டு சென்னை வந்து, நகைக்கடைகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகைகளை கொள்ளையடித்து செல்வது தெரியவந்தது. மேலும், அவருடன் ஆந்திராவில் இருந்து 10 பேர் கொண்ட குழு சென்னை வந்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, லலிதாவை போலீசார் கைது செய்தனர். அவருடன் சென்னைக்கு வந்த மற்ற 9 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: