சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு கூட்ட நெரிசலை பயன்படுத்தி தி.நகரில் உள்ள பிரபல கடையில் நகை திருட முயன்ற ஆந்திர பெண்ணை போலீசார் கைது செய்தனர். அட்சய திருதியை முன்னிட்டு சென்னையில் உள்ள நகைக்கடைகளில் கூட்டம் அலை மோதியது. கூட்டத்தை பயன்படுத்தி நகை திருடும் கும்பலை படிக்க போலீசார் சாதாரண உடையில் கடைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தி.நகர் பனகல் பார்க் எதிரே உள்ள பிரபல நகைக்கடையில் நேற்று முன்தினம் அதிகாலை சந்தேகத்திற்கு இடமான வகையில் ெபண் ஒருவர் சுற்றி வந்துள்ளார். இதை பார்த்த நகைக்கடை ஊழியர்கள் மாம்பலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து கடையில் கூட்ட ெநரிசலில் சுற்றிதிரிந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.