கரூர், மே 9: கரூர் நகராட்சிக்குட்பட்ட முத்துலாடம்பட்டி செல்லும் சாலையோரம் அங்கன்வாடி எதிரே சிதிலமடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தினை உடனடியாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் தாந்தோணிமலை பகுதியில் இருந்து முத்துலாடம்பட்டி, கணபதிபாளையம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலையோரம் துவக்கப்பள்ளியும், இதன் அருகே அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது.20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வரும் அங்கன்வாடி மையம் எதிரே பழுதடைந்து, சிமெண்ட் துகள்கள் உதிர்ந்து மிகவும் மோசமான நிலையில் மின்கம்பம் உள்ளது.