க.பரமத்தி ஒன்றிய பகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் தீவிர வாக்கு சேகரிப்பு

க.பரமத்தி, மே 9: அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட குக்கிராமங்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று க.பரமத்தி ஒன்றியம் சூடாமணி, நஞ்சைகாளகுறிச்சி, புஞ்சைகாளகுறிச்சி, எலவனூர், ஆரியூர் ஆகிய ஐந்து ஊராட்சிகளுக்குட்பட்ட குக்கிராமங்கள் முழுவதும் வீதி வீதியாக சென்று அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் வாக்கு சேகரித்தார். சென்ற இடங்களில் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவருடன் மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள்  சென்று வாக்கு சேகரித்தனர்.

வேட்பாளர் செந்தில்நாதன் பேசுகையில், அரவக்குறிச்சி, க.பரமத்தி ஒன்றிய பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.220கோடி மதிப்பில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வர உள்ளது. முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பொது மக்களுக்காக நல்ல பல அரிய திட்டங்கள் கொண்டு வருவார். அவற்றை பொதுமக்களாகிய உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேன் எனவே சட்டமன்ற உறுப்பினராகும் வாய்ப்பினை வாக்காளர்களாகிய நீங்கள் வழங்கினால் தொகுதி வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டு திட்டங்களை கொண்டு வருவேன். எனவே  இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார். பிரசாரத்தில் மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கிளை  நிர்வாகிகள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: