திருப்பூர்,ேம9: திருப்பூர் நீதிமன்ற வளாகத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் குமரன் ரோட்டில் சப்-கோர்ட் செயல்பட்டு வருகிறது. கோர்ட் வளாகத்தில் நேற்று காலை குடிபோதையில் ஒருவர் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார். கோர்ட் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் குடிபோதையில் இருந்த நபரை அமைதியாக இருக்கும் படி கூறியுள்ளனர். இதனையும் மீறி அவர் கூச்சலிட்டதால் போலீசார் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியில் செல்லும் படி அறிவுறுத்தினர். ஆனால் நீதிமன்ற வளாகத்தின் தரையில் படுத்து மேலும் பயங்கரமாக கூச்சலிட்டுள்ளார்.