திருவொற்றியூர், மே 9: திருவொற்றியூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஜான் பீட்டர் வியானி மற்றும் தலைமை காவலர் வினாயக மூர்த்தி ஆகிய இருவரும் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த எண்ணூர், வள்ளுவர் நகரை சேர்ந்த மணிகண்டன் (22) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மணிகண்டன் மது அருந்தி இருந்தது தெரிந்தது. எனவே அவரை பைக்கில் இருந்து இறங்குமாறு உதவி ஆய்வாளர் கூறியுள்ளார். இதில் மணிகண்டனுக்கும், உதவி ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.