காந்திபுரம் சக்தி மாரியம்மன் கோயில் குண்டம் விழா

மஞ்சூர், மே 8:  காந்திபுரம் மாரியம்மன் கோயில் பூ குண்ட திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.    மஞ்சூர் அருகே உள்ள காந்திபுரத்தில் சக்தி மாரியம்மன் கோயில் 26ம் ஆண்டு திருவிழா கடந்த 3ம் தேதி ெகாடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல், கணபதி பூஜை, கரகம் பாலித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் விரதம் இருந்த பக்தர்கள் ஏராளமானோர் பக்தி பரவசத்துடன் இறங்கினர். இதில் பெண்கள் பலர் குழந்தைகளுடன் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகளுடன் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. மேலும் விழாவை முன்னிட்டு மாவிளக்கு ஊர்வலம், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர் செய்திருந்தனர்.

Related Stories: