திருத்துறைப்பூண்டி, மே 8: திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் பூட்டி கிடக்கும் புறக்காவல் நிலையத்தை உடனே திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் உள்ளது. திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் போலீஸ் பற்றாக்குறையால் அடிக்கடி இரண்டு புறக்காவல் நிலையங்களும் பூட்டிக்கிடப்பது குறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிட்ட பிறகு புறக்காவல் நிலையம் திறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்திலுள்ள புறக்காவல் நிலையம் பூட்டி கிடக்கிறது.