சீர்காழியில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கூட்டம்

சீர்காழி, மே 8: சீர்காழியில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. சங்க வட்டத் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். பொருளாளர் ராஜகோபாலன், துணைத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, கலியபெருமாள் அமைப்பு செயலாளர்கள் நாராயணன், சோமசுந்தரம், மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பழனி வரவேற்றார். கூட்டத்தில் மூத்த ஓய்வுபெற்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர் இதில் நிர்வாகிகள் ஜெயராமன் முருகையன், முத்தையன், பிச்சை, பொற்செல்வி, ராஜகோபாலன், அன்னபுஷ்பம், சந்தானலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: