கரூர், மே 8: அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு ஆதரவாக, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாறையூர், அரவக்குறிச்சி, ஈசநத்தம், பள்ளப்பட்டி ஷா நகர், சின்னதாராபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 5மணி முதல் 9மணி வரை வாக்குகள் சேகரித்து பேசினார். அரவக்குறிச்சியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில், அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து துணைமுதல்வர் ஓபிஎஸ் பேசுகையில்,மத்திய, மாநில அரசுகளின் நல்ல திட்டங்களை உங்களுககு கொண்டு வந்து செந்தில்நாதன் சேர்ப்பார். தமிழக மக்களுக்கு உணவு பாதுகாப்பினை வழங்கியவர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு கான்கீரிட் வீடுகள் கட்டித் தரப்படும் எனச் சொல்லி இதுநாள் வரை 6லட்சம் பயனாளிகளுக்கு கட்டி தரப்பட்டுள்ளது.திருமண உதவித்திட்டம், 20 கிலோ அரிசி, மகப்பேறு நிதியுதவி திட்டம், பெண்களுக்கு ஸ்கூட்டி போன்ற பல்வேறு நலத்திட்டங்களை பார்த்து பார்த்து ஜெயலலிதா செய்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணம் விவசாயம்.