உடன்குடி, மே 8: செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோயில் சித்திரை திருவிழாவையொட்டி பல்லாயிரகணக்கான பக்தர்களுக்கு அன்னமுத்திரி பிரசாதம் வழங்கப்பட்டது. உடன்குடி அருகேயுள்ள செட்டியாபத்து ஐந்து வீட்டுசுவாமி கோயில் தென்மாவட்டங்களில் பிரசித்திபெற்றது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 30ம்தேதி இரவு 7மணிக்கு கஞ்சி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து பக்தர்களுக்கு கஞ்சி வழங்கபட்டது. கடந்த 1ம் தேதி நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 10 மணிக்கு மேக்கட்டி கட்டுதல், மேக்கட்டி பூஜையும் நடந்தது. திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்தினருடன் வந்து கோயில் வளாகத்தில் முகாமிட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததனர்.