டூவீலரில் சென்ற போது விபத்து லாரி மோதி பெண் பலி

கிருஷ்ணகிரி, மே 7: காவேரிப்பட்டணம் கருக்கன்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(36). இவர், தனது உறவினரான கரகூர் பகுதியைச் சேர்ந்த பெரியநேசன் மனைவி முனியம்மாள்(34) என்பவரை தனது டூவீலரில் ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணகிரியிலிருந்து தர்மபுரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். எர்ரஹள்ளி பகுதியில் வந்தபோது பின்னால் வந்த லாரி, டூவீலர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் முனியம்மாள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுரேஷ் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: