கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது

 

கிருஷ்ணகிரி, மே 27: கெலமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு, கோடியூர் பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்ஐ தினேஷ் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது கோடியூரை சேர்ந்த ராஜ்குமார் (33) என்பவர் வீட்டில், ₹12 ஆயிரம் மதிப்பிலான 1,200 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து, அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 

The post கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: