அலங்காநல்லூர், மே 7:மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை அடுத்த சின்னஇலந்தைகுளம் கிராமத்தில் உள்ள அக்கினிவீரன், மார்நாடு கருப்புசாமி, லாடசன்னாசி, சீலைக்காரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி முதல் இரண்டு நாட்கள் யாகசாலை பூஜைகள் நடந்தது. மூன்றாவது நாள் காலையில் மேள, தாளம் முழங்க அழகர்மலை, வைகை, கங்கை, காவிரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் யாகசாலையிலிருந்து எடுத்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பட்டர்களின் வேதமந்திரங்கள் முழங்க குடம் குடமாக கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.