வேலூர், மே 7:துணை பிடிஓ வேலை வாங்கி தருவதாக கூறி ₹19 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர். வேலூர் மாவட்டம், ஆம்பூர் அத்திமாகொலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(62). இவர் நேற்று காலை வேலூர் எஸ்பி அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகன் புருஷோத்தமன்(28). ஐடிஐ முடித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு ஆம்பூரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் எனக்கு அறிமுகம் ஆனார். தான் வட்ட வழங்கல் அதிகாரியாக இருப்பதாகவும், ₹19 லட்சம் கொடுத்தால் புருஷோத்தமனுக்கு துணை பிடிஓ வேலை வாங்கி தருவதாகவும் என்னிடம் தெரிவித்தார். இதை நம்பி 4 தவணையாக ₹19 லட்சத்தை ராஜ்குமாரிடம் கொடுத்தேன்.