மேலூர் அருகே தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சங்கரலிங்கம், ஸ்ரீ சங்கரநாராயணசுவாமி, கோமதியம்மாள் கோயில். இங்கு நேற்று சித்திரை மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நந்தியம் பெருமாளுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகாவ்யம், பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம் உட்பட பல அபிஷேகங்கள் நடைபெற்றது. பக்தர்கள் சிவபுராணம், கோளறு பதிகம், நந்திதேவரின் கவசம் பாராயணம் செய்தனர்.