கொடைக்கானல், மே 3: தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் கொடைக்கானல் கேபிஎஸ் பள்ளியில் நடந்தது. திண்டுக்கல் கராத்தே அசோசியேஷன் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டிகளில் கர்நாடகா, பஞ்சாப், பாண்டிச்சேரி, கொல்கத்தா உள்ளிட்ட இந்திய அளவில் இருந்தும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்தும் 300க்கும் அதிகமான கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர். வயது வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டது. 7 வயது முதல் 15 வரை வயது வரை ஜூனியர் பிரிவாகவும், 19 வயதிலிருந்து இருந்து 21 வயது வரை சீனியர் பிரிவாகவும் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கராத்தே போட்டிகளில் கட்டா முறை போட்டியும் குமித்தே எனப்படும் சண்டையிடும் போட்டியும் நடத்தப்பட்டன.