கீழக்கொட்டையூர் மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

கும்பகோணம், மே 1: கும்பகோணம் அடுத்த கீழக்கொட்டையூர் மூப்பக்கோவிலில் உள்ள பாலமாரியம்மன் கோயில் சித்திரை உற்சவ விழாவையொட்டி பால்குட விழா, தீமிதி திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 21ம் தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. இதைதொடர்ந்து தினம்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று அதிகாலை காவிரி ஆற்றிலிருந்து பால்குட திருவிழா நடந்தது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு அக்னி பிரவேசம் எனும் தீமிதியும், இரவு புஷ்ப பல்லக்கில் வீதியூலாவும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 5ம் தேதி இரவு விடையாற்றி விழா நடக்கிறது.

Related Stories: