பொன்னமராவதி, மே1: பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற 10 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பொன்னமராவதி அருகே அன்னவாசல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சித்தூர் என்ற இடத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் மணல் ஏற்றிச்சென்ற லாரிகளை மறித்து விசாரணை செய்தனர். அப்போது அனுமதியின்றி ஏற்றி வந்த மணல் லாரிகள் என்பது தெரியவந்து. இதனையடுத்து 7 மணல் லாரிகள், 2 டிராக்டர், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து காரையூர் போலீசில் ஒப்படைத்தனர்.