கரூர், மே. 1: கரூர் வாங்கல் எல்லைமேடு வழியாக செல்லும் பாசன வாய்க்காலை சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியில் இருந்து நெரூர் வரை கிராமங்களின் வழியாக பயணிக்கும் வகையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பாசன வாய்க்கால் அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் இதன் வழியாக செல்லும் தண்ணீர், அவ்வப்போது பாசனத்துக்கும் பயன்பட்டு வந்தது. இந்நிலையில், ஆண்டுகள் பல கடந்த நிலையில், நீண்ட நெடிய இந்த பாசன வாய்க்கால் பல இடங்களில் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.