நீர், மோர் பந்தல் திறப்பு

சங்கரன்கோவில், ஏப்.30:  சங்கரன்கோவில் அருகே உள்ள வன்னிக்கோனேந்தல் கிராமத்தில் பூலித்தேவர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் தண்ணீர் மற்றும் மோர்பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. வன்னிகோனேந்தல் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்ட்டிருந்த நீர், மோர் பந்தலை நற்பணி மன்ற நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர்.மேலும் அவர்கள் அப்பகுதியில் நூலகம், கண்காணிப்பு கேமரா, தெருவுக்கு ஓர் குப்பை தொட்டி உள்ளிட்ட உதவிகள் செய்ய ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்தனர். தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியில் மன்ற நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: