ரோவர் கல்லூரி 31வது பட்டமளிப்பு விழா

பெரம்பலூர், ஏப்.30: பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரியில் 31வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக அரங்கத்தில் நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்ட தலைமை நீதிபதி சஞ்சீவி பாஸ்கர்  பங்கேற்று பேசினார்.விழாவிற்கு முன்னிலை வகித்த ரோவர் கல்விக் குழுமங்களின்  மேலாண் தலைவர் .வரதராஜன் வாழ்த்தி பேசினார்.கல்லூரி முதல்வர்  விஜயகுமார்  ஆண்டறிக்கை வாசித்தார்.விழாவில் ,அறக்கட்டளை உறுப்பினர்.மஹாலட்சுமி வரதராஜன் ,துணை மேலாண் தலைவர் திரு.ஜான் அசோக் வரதராஜன் ,ரோவர் கல்விக் குழுமங்களின் இயக்குனர் திரு .பாலமுருகன் ,தேர்வு நெறியாளர்  முருகேசன் ,துணை முதல்வர் மகேந்திரன்,துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இப்பட்டமளிப்பு விழாவில் 685 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.8 மாணவர்கள்  பல்கலைக்கழக அளவில் தரம் பெற்று பதக்கங்களை வென்றனர்.

Related Stories: