துறையூர் அருகே பூட்டிக்கிடந்த வீட்டில் நகை, பணம் திருட்டு

துறையூர், ஏப்.30: துறையூர் அருகே பூட்டிக்கிடந்த வீட்டில் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். துறையூர் அருகே முருகூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பொன்னம்பலம் மகன் ராஜேந்திரன் (55). விவசாயி. இவர் அதே ஊரில் இறந்துபோன ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வீட்டைப் பூட்டி விட்டுச் சென்றார். மதியம் வீட்டிற்கு சென்று பார்த்தபோது பழைமையான அவருடைய வீட்டின் பின்புற கதவு வழியாக வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் பீரோ அருகே இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து அதிலிருந்த 7 சவரன் மதிப்புள்ள மோதிரம், செயின், தோடு உள்ளிட்ட தங்க நகைகளையும், ரூ.30 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்றது தெரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் துறையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: