திருவண்ணாமலை, ஏப்.28: ஜமுனமரத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். ஜமுனாமரத்தூர் தாலுகா ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள காட்டில் தினமும் ஆடு மேய்க்க செல்வது வழக்கம். அப்போது சிறுமியுடன் ஆடுமேய்த்து கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த முத்துசாமியின் மகன் முருகன்(18) என்பவர் கடந்த 3 மாதத்திற்கு முன்பு காட்டுப்பகுதியில் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி 2 மாதம் கர்ப்பமடைந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி கடந்த 3ம் தேதி மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார்.