குளத்துப்பாளையம் சாலையில் தேங்கியுள்ள குப்பைகள் அகற்றப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

கரூர், ஏப். 26: கரூர் நகராட்சிக்குட்பட்ட குளத்துப்பாளையம் சாலையில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் நகராட்சி வெங்கமேடு பகுதியில் இருந்து குளத்துப்பாளையம் செல்லும் சாலையோரம் ஏரளமான குடியிருப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் உள்ளன.இந்த சாலையோரம், இந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் சாக்கடை கழிவுகள் அனைத்தும் ஒரே இடத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் பகுதியினர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, தேங்கியுள்ள இந்த குப்பை மற்றும் சாக்கடை கழிவுகளை இந்த பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: