குளித்தலையில் ரயிலில் அடிபட்டு டிரைவர் பரிதாப பலி

குளித்தலை, ஏப்.26:  குளித்தலையில் ரயிலில் அடிபட்டு ஒருவர் உடல் சிதறி பலியானார்.குளித்தலையில் கரூர் மாவட்டம் குளித்தலை மணப்பாறை சாலை ரயில்வே கேட் அருகே நேற்று அதிகாலை உடல் துண்டு துண்டான நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். இத்தகவல் அறிந்த ரயில்வே துறை அலுவலர் நேரில் சென்று பார்த்து குளித்தலை ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மேலும் இறந்து கிடந்தவரின் சட்டைப் பையில் ஓட்டுனர் உரிமம் இருந்தது. அதில் யுவராஜேந்திர பிரசாத் (46). தந்தை பெயர் பெருமாள். கடம்பூர் கோவில் தெருவை சேர்ந்தவர் என்ற முகவரி இருந்தது. மேலும் இவர் போட்டோகிராபர் தொழில் செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் காரணம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: