கிருஷ்ணகிரி, ஏப்.26: பர்கூர் அருகே அடுத்தடுத்த வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில், ரொக்கம், நகை மற்றும் பொருட்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த காரகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட எர்கெட்டு பகுதியை சேர்ந்தவர் குடியப்பன்(60). இவரது தம்பி கெஞ்சப்பன்(55), பக்கத்தில் உள்ள பனை ஓலை குடிசையில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று சகோதரர்கள் இருவரும் கூலி வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் திடீரென இருவரது வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன. இதை கண்ட அக்கம்பக்கத்தினர், ஓடி வந்து தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை.